ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது பேசிய மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி, “உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், எங்களை விட பலம் வாய்ந்த பேனாவை நீங்க கையில வச்சிக்கிட்டிருக்கீங்க. எப்படி குவாலிஃபைட் பியூப்பிள்தான் படத்துல நடிக்க முடியுமோ, சினிமாட்டோகிராபி பண்ண முடியுமோ, ரகுமான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ, அதே மாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான், விமர்சனம் எழுதணும்.
நீங்கள்லாம் இருக்கும் போது, எல்லாரையும் எழுத விட்றாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இப்ப கம்ப்யூட்டர் உலகத்துல, மவுசை மூவ் பண்ண தெரிஞ்சவங்கள்லாம் எழுத்தாளர் ஆகிட்டாங்க. அப்படி விட வேண்டாம், நீங்கள்லாம் இவ்வளவு குவாலிஃபைடா இருக்கும் போது, எதுக்கு மத்தவங்களை எழுத விடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதுங்கன்னு வேண்டிக்கிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.
சுஹாசினியின் இந்தக் கருத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சகட்டு மேனிக்கு 'கமெண்ட்' அடித்து எழுதுபவர்கள், சுஹாசினியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பல கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
சமீப காலமாக ஒரு நடிகரின் ரசிகர்களுக்கும், வேறொரு நடிகரின் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களில் சமூக வலைத்தளங்கள் ஒரு அடித்தளமாக பயன்பட்டு வருகிறது. சில கருத்துக்கள் படங்களைப் பற்றியும் மீறி அவர்களது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றித் தரக்குறைவாகவும் சித்தரிக்கும் விதமாகவும் மாறி வருகிறது.
எப்படி சமூக வலைத்தளங்களில் அவரவர்க்கு கருத்துக்களைச் சொல்ல உரிமை இருக்கிறேதோ, அதே போலத்தான் சுஹாசினியும் அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்.