இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
என்னதான் சிறப்பான நடிகர்களாக இருந்தாலும், விதமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் குழந்தைகளை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும் கேரக்டர்களில் நடிப்பது என்பது அவர்களுக்கு சவாலான விஷயம் தான். தமிழில் அந்த வேலையை சில முன்னணி ஹீரோக்கள் திட்டமிட்டு செய்து வருகிறார்கள். ஆனால் மலையாளத்தில் அப்படி யாரும் மெனக்கெடுவது இல்லை. முன்னணி நடிகர்களே அப்படி என்றால், ஜெயசூர்யா போன்ற இரண்டாம் நிலை நடிகர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
ஆனால் சமீபத்தில் யூ டியூப்பில் வெளியான ஒரு வீடியோ ஜெயசூர்யாவை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயசூர்யா நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான 'ஆடு ஒரு பீகர ஜீவியானு' படத்தில் ஜெயசூர்யாவுக்கு என அறிமுகப்பாடல் உண்டு. அந்தப்படத்தை பார்த்த நான்கு வயது சிறுவன் ஒருவன், அடிக்கடி அந்தப்பாடலை ஒலிக்கவிட்டு தனது வீட்டில் உள்ள போர்ட்டிகோ முன்னால் படத்தில் ஜெயசூர்யா அறிமுகமாகவதை போல ஹைஸ்பீடில் ஓடிவருகிறான்.
இந்தக்காட்சியை பையனின் தந்தை வீடியோவாக்கி யூ டியூப்பில் ஏற்ற, இது ஜெயசூர்யாவின் பார்வைக்கும் போனது. நமக்கு இப்படி ஒரு குழந்தை ரசிகரா என ஆச்சர்யப்பட்டு போன ஜெயசூர்யா, “தாங்க்யூடா மோனே” என நன்றி சொல்லி அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்