தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு நடிகையான ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் ரஜினி,விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்ச நடிகையாக வளர்ந்தார். அதோடு, தன்னை சினிமாவில் ஆளாக்கிய டைரக்டர் ஆர்.கே.செல்வமணியையே திருமணம் செய்து கொண்டார்.
மேலும், சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தபோதே அரசியல் கட்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வந்த ரோஜா, சமீபகாலமாக ஆந்திராவில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு பெரிய அரசியல்வாதியாகி விட்டார்.
அதனால், தொகுதி மக்களுக்கு அங்கிருந்தபடியே சேவையும் செய்து வருகிறார். அதோடு, ரோஜாவுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம். அதனால் சக்திவாய்ந்த கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வரும் அவர், ஆந்திராவில் ஒரு லிங்கேஸ்வரன் கோயிலுக்கு தனது பெயரில் ஒரு மண்டபம் கட்டிக்கொடுத்திருக்கிறார்.
இப்படி ரோஜா மண்டபம் கட்டிக்கொடுத்து லிங்கேஸ்வரன் கோயிலில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருக்கிறது. 4 வில்லன்களை விஜய் துரத்தி துரத்தி பந்தாடும் அந்த காட்சி அங்கு படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஒருநாள் ரோஜாவும் அந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தாராம். அப்போது அங்கு விஜய் படப்பிடிப்பு நடக்கிற சேதியறிந்து, ஸ்பாட்டுக்கு வந்து அவரை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றிருக்கிறார் ரோஜா.