தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
''கடல்'' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ''ஓ காதல் கண்மணி''. மம்முட்டி மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கனிகா ஆகியோர் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அலைபாயுதே பட டைப்பிலான ஒரு கதையை சொல்ல இருக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் வௌியான படத்தின் பாடல்கள் எல்லாம் கிளாஸாக இருக்கிறது. குறிப்பாக மென்டல், ஆட்டக்காரா மற்றும் சினாமிகா பாடலுக்கு ரசிகர்களிடம் 'செம' வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மணிரத்னம், வைரமுத்து மற்றும் ரஹ்மான் கூட்டணி தொடர்ந்து 23 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்நிலையில், ''ஓ காதல் கண்மணி'' படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, நான், ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தொடர்ந்து 23 ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். தயாரிப்பு தரப்பிலிருந்து பார்த்தால் 23 படங்கள் தானா என்று தோன்றும், ஆனால் ஒவ்வொரு படத்தையும் தரமான படமாக தந்துள்ளார் மணிரத்னம்.
பொதுவாக நான், மணிரத்தினத்தின் படங்களை ஐந்தாறு முறை பார்த்து விடுவேன். ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக இருக்கும், அதேசமயம் புதியதாகவும் இருக்கும். கடவுளை பார்த்து பக்தன் பாடுவது போன்றும், காதலியை பார்த்து காதலன் பாடுவதும் போன்று ஒரு பாடல் வேண்டும் என மணிரத்னம் கேட்டார். அதன்படி நானும், ''மலர்கள் கேட்டேன்...'' என்றொரு பாடலை எழுதி கொடுத்தேன். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேற்கத்திய பாடல்கள் தெரிந்தாலும் ஒரு அற்புதமான இசையை கொடுத்துள்ளார்.
அதேப்போல் மென்டல் என்ற பாடலை ரஹ்மானும், மணிரத்னமும் எழுதியுள்ளனர். நான் அவசர வேலையாக ஊருக்கு சென்றுவிட்டேன். அதனால் அந்தபாடலை அவர்கள் எழுதினார்கள். நான் ஊரில் இல்லாத நேரம் பார்த்து இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டார்கள். இதை பார்க்கும் போது இனிமே ஊருக்கு போகக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். தமிழ் சினிமாவில் அதிக குத்துப்பாடல்கள் உருவாகும் சூழலில் ஓ காதல் கண்மணி போன்று அழகிய பாடல்களும் வௌிவருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனித்து பயணித்துள்ளார். இன்றைக்கு இந்தப்படத்தின் பாடல்களை எல்லாம் இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஓ காதல் கண்மணி படத்தில் கலாச்சார அதிர்ச்சியை தான் மணிரத்னம் பதிவு செய்துள்ளார். அதாவது திருமணம் செய்யாமல் ஆணும், பெணும் வாழ்வது போன்ற கதை. இன்றைக்கு கலாச்சாரம் அதைநோக்கி தான் செல்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்று இருக்குமா...? என்று எண்ண தோன்றும். இதுபோன்ற கலாச்சார அதிர்ச்சியை மணிரத்னம் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு வைரமுத்து பேசினார்.
ஓ காதல் கண்மணி படம் வருகிற ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஞானவேல் ராஜாவின், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது.