விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பூ, மற்றும் மரியான் போன்ற படங்களில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் பார்வதி. சமகால நடிகைகளில் நடிகையர் திலகமாக விளங்கிக் கொண்டிருப்பவர் பார்வதி என்று திரைப்படத்துறையினரே வியப்பார்கள். பார்வதியைப் பற்றி கமலும் அறிந்து வைத்திருந்ததினால் தான் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தை ஆரம்பித்தபோது பார்வதிக்கு முக்கிய வேடத்தைக் கொடுத்திருக்கிறார் கமல்.
இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். என்றாலும், உத்தமவில்லன் படத்தில் பார்வதியின் கேரக்டர் பேசப்படும் அளவுக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உத்தமவில்லன் படத்தின் செய்தியிலும் பப்ளிசிட்டியிலும் பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பார்வதி ஏற்று நடித்துள்ள கேரக்டர் எப்படிப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. தன்னைப் பற்றிய செய்தி வெளியாகாமல் இருந்தது பார்வதியை வருத்தப்பட வைத்துவிட்டதாம்.
இது பற்றி கமலிடம் கேட்க தைரியமில்லாமல், இயக்குநரான ரமேஷ் அரவிந்துக்கு போன் பண்ணி வருத்தப்பட்டிருக்கிறார். அதன் பிறகே, உத்தமவில்லன் படத்தில் பார்வதி கமலுக்கு மகளாக நடித்துள்ள தகவலை வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். அது மட்டுமல்ல கமலுக்கு இணையான நடிப்பை பார்வதி வழங்கியுள்ளார் என்றும் பத்திரிகைப் பேட்டிகளில் கூறி வருகிறார் ரமேஷ் அரவிந்த்!