பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
அமலாபாலின் சினிமா கேரியரில் மைனா எப்படி மறக்க முடியாத படமோ அதேபோல் சிந்துசமவெளி மறக்க வேண்டிய படம். அது வளர்ந்து வந்த நேரம் என்பதால் மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் அந்த வேடத்தில் நடித்தார். ஆனால் அதைநினைத்து இப்போதும் அவர் வருந்திக்கொண்டிருக்கிறார். அதோடு அப்படியொரு படத்தின் தான் நடித்ததையே மறக்க நினைக்கிறார் அவர். ஆனால், எல்லாம் முடிந்து விட்டது. இப்போது நாம் ஒரு டைரக்டரின் மனைவி என்கிற ரீதியில் அவர் புதிய மனநிலையுடன் இருக்கிறார். ஆனால், இந்தநேரம் பார்த்து தற்போது சிந்துசமவெளியை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு படம் வெளியாக இருப்பது அமலாபாலுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம், கங்காரு படம் சாமியின் முந்தைய படங்களில் இருந்து வேறுபட்ட படம் என்றபோதும், அவரது முந்தைய படங்களான உயிர், சிந்துசமவெளி ஆகிய படங்களையும் குறிப்பிட்டே இந்த கங்காரு படத்தின் விளம்பரங்களை செய்யப்போகிறார்களாம். முக்கியமாக, முந்தைய படங்களின் ட்ரெய்லரையும் கங்காரு ட்ரெய்லரோடு சற்று இணைத்தே பப்ளிசிட்டி செய்கிறார்களாம். இதனால், மறக்கடிக்கப்பட்ட சிந்துசமவெளி சம்பவங்கள் மறுபடியும் மக்கள் மனதில தோன்றுமே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கும் அமலாபால், ஏன்தான் அப்படியொரு படத்தில் நடித்தேனோ என்று தனது அபிமானிகளிடம் சொல்லி சொல்லி கடுமையாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம்.