ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி என பல ஹிட் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த இப்படங்கள் எல்லாமே பெரிய அளவில் வசூலித்தன. அதனால் கோடம்பாக்கத்தின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்து நின்றார் சி.வி.குமார்.
ஆனால், சரபம், எனக்குள் ஒருவன் போன்ற படங்கள் அவருக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்து விட்டன. இருப்பினும் தற்போது இன்று நேற்று நாளை, இறைவி போன்ற படங்களை தயாரிக்கும் அவர், மாயவன் என்ற படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார்.
இந்தநிலையில், எதிர்கால சினிமா குறித்து சி.வி.குமார் கூறுகையில், சமீபகாலமாக படங்கள் ஓடுவதே அரிதாகி விட்டது. இருப்பினும் அதிகப்படியான படங்கள் வெளியாகிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், தற்போது தோல்வி பெரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்கிறார்.