மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒரு காலத்தில் பெரும்பாலான நடிகர்களின் பட பூஜை போடப்பட்டதுமே அந்த படங்கள் விற்பனை ஆகி விடும். ஆனால் இப்போதெல்லாம் ஓரிரு ஹீரோக்களின் படங்களை தவிர மற்ற படங்களை பார்த்த பிறகுதான் விலை பேசுகிறார்கள்.
ஆனால், சாட்டிலைட் வியாபாரத்தைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் படப்பிடிப்பு நடக்கும்போதே விலை பேசப்படுகிறது. ஆனால் விலை மசியவில்லை என்றால் சில தயாரிப்பாளர்கள் படம் ரிலீசாகி ஓடினால் தாங்கள் கேட்டதை விட அதிக தொகை கிடைக்கும் என்று எகிறி பேசி விடுகிறார்கள்.
அந்த வகையில், விமல் நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, விஜயசேதுபதி நடித்த வன்மம் ஆகிய இரண்டு படங்களையும் படப்பிடிப்பு நடந்தபோது சார்ட்டிலைட் உரிமை 4 கோடி கேட்டனர். ஆனால் சேனல்காரர்கள் அந்த தொகையை கொடுத்து படத்தை வாங்க முன்வரவில்லை.
விளைவு, மேற்படி படங்கள் வெளியாகி ஓடாததால் இப்போது 50 லட்சம் கொடுத்து வாங்ககூட சேனல் உரிமையாளர்கள் தயாராகயில்லை. அதனால், அவர்கள் 2 கோடிக்கு வங்க முன்வந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது. மாறாக, 4 கோடி கேட்டு பிடிவாதம் செய்ததால் இப்போது இப்படி மோசம் போய் விட்டோம் என்று சம்பந்தப்பட்டவர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.