இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அட்டகத்தி நந்திதா நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் சாதாரண நடிகையாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த அவர், வியாபார ரீதியாக பேசப்படும் நடிகையாகி விட்டார். அந்தவகையில், ஆரம்பத்தில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த அவர், தற்போது ஹீரோ, டைரக்டர், பட நிறுவனம் என அனைத்தையும் ஆராய்ந்து ஓரளவு பேசப்படும் படமாக இருந்தால் மட்டுமே ஓகே சொல்கிறார்.
மேலும், இதுவரை கதை விசயத்தில் பெரிதாக மூக்கை நுழைக்காத நந்திதா, இப்போது விலாவாரியாக கதையை கேட்கிறார். தனக்கு பர்பாமென்ஸ் பண்ண போதுமான வாய்ப்புகள் இல்லையேல் இந்த கதை எனக்கு சரிப்பட்டு வராது என்று நெத்தியடியாக சொல்லி அந்த படங்களை தட்டிக்கழித்து விடுகிறார்.
இந்த நிலையில், தற்போது உறுமீன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாயகி வேடத்தில் நடித்து வரும் நந்திதா, அடுத்து இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட முண்டியடித்து வருகிறார். அதனால் படப்பிடிப்பு போக மீதமிருக்கும் நேரங்களில் சில டைரக்டர்களுடன் மீட்டிங் போடும் நந்திதா, பெரிய ஹீரோ படங்கள் என்கிற பட்சத்தில் சம்பளம் பற்றி வாயை திறப்பதே இல்லை.
ஆனால், சிறிய ஹீரோ, சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் சம்பள விசயத்தில் குறியாக இருக்கிறார். முக்கியமாக இவ்வளவு லட்சமாவது தனக்கு தர வேண்டும் என்று கண்டிசனாக சொல்கிறார். நந்திதாவின் இந்த திடீர் கண்டிசன் காரணமாக பட்ஜெட் படங்களுக்கு குறைந்த சம்பளத்தில் நடிப்பார் என்று நம்பி அவரை புக் பண்ண சென்ற பட அதிபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.