ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தன் சித்தி உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்திராவில் செட்டிலான அஞ்சலி, அடுத்த ரவுண்ட்டுக்குத் தயாராகிவிட்டார். சித்தி தரப்பினரால் தனக்கு பிரச்சனைகள் வரலாம் என்பதால் சில மாதங்கள் ஆந்திராவிலேயே இருந்தார். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, தமிழில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஜெயம் ரவியுடன் 'அப்பாடக்கர்', விமலுடன் 'மாப்பிள்ளை' சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வரும் அஞ்சலிக்கு இப்போதும் புதிததாக ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
'ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படம் 'இறைவி'. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கருணாகரன் என ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 'இறைவி' படத்துக்கு கதாநாயகிகளுக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக அஞ்சலி நடிப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் 'இறைவி' படத்தின் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொள்கிறார். அதற்குள் மற்ற கதாநாயகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.