எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
கமல்ஹாசன் அத்தனை சீக்கிரத்தில் இம்ப்ரஸ் ஆக மாட்டார். எந்த விஷயத்திலும் அவரை திருப்திப்படுத்துவது கஷ்டம். அப்பேற்பட்ட கமலையே தன் இசையால் கட்டிப்போட்டுவிட்டார் ஜிப்ரான். 'வாகை சூட வா' படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் கமலின் கவனத்தை ஈர்த்தார்.
கமல் நடிப்பில் தயாராகி வரும் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்தவகையில் இப்போது கமலின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிவிட்டார் ஜிப்ரான். தற்போது 'சென்னை சிங்கப்பூர்' என்ற படத்திற்கு இசையமைத்து வரும் ஜிப்ரான், அடுத்ததாக விஷ்ணு நடிக்கும் 'போடா ஆண்டவனே என் பக்கம்' படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கும் படம் இது. இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக 'பிசாசு' அறிமுக நாயகி பிரயாகா நடிக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கான படப்பிடிப்பு மே இறுதியில் சென்னையில் துவங்குகிறது. அதோடு பாடல் காட்சிகளுக்காக விஷ்ணு, பிரயாகா உள்ளிட்ட படக்குழு 10 நாட்கள் கனடாவுக்கும் செல்லவிருக்கிறது. அதற்குள் பாடலை தயார்செய்து கொடுக்க வேண்டும் என்ற பரபரப்பில் பாடல்களை உருவாக்கி வருகிறாராம் ஜிப்ரான்.