ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்தி, நாகார்ஜுனா முதன் முறையாக இணைந்து நடிக்க வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமாகியது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அதன் பின் திடீரென இப்படத்தில் நடிக்க முடியாதென விலகினார். இதனால் தயாரிப்பு நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீது வழக்கையும் தொடர்ந்திருக்கிறது. இதனிடையே தொடர்ந்து ஸ்ருதியையும் தங்கள் படத்தில் நடிக்க வைக்க விருப்பமில்லாமல், வேறொரு கதாநாயகியைத் தேடினார்கள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நன்றாக அறிமுகமான தமன்னாவை தங்கள் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள்.
நேற்று முதல் தமன்னா இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கார்த்தி ஜோடியாக தமன்னா நடித்து இதற்கு முன் வெளிவந்த 'பையா, சிறுத்தை' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இருவரும் இணைந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்தது குறித்து தமன்னா கூறியதாவது, “நாகார்ஜுனா, கார்த்தி, வம்சி படிப்பள்ளி ஆகியோருடன் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.