மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறைவையொட்டி, திருவண்ணாமலையில் அவருக்காக மோட்ச தீபம் ஏற்ற இருக்கிறார் இசைஞானி இளையராஜா. எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. இலக்கிய உலகின் மிக உயரிய, ஞான பீடம் விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜெயகாந்தன் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சென்று சந்தித்து வந்தார். இந்நிலையில், ஜெயகாந்தனின் மறைவு இளையராஜாவை அதிகர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக ஒரு இரங்கல் அறிக்கையும் வௌியிட்டுள்ளார் இளையராஜா.
அதில் கூறியிருப்பதாவது, நான், அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது, நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான். நாங்கள் உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னபோது, என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்? என்று கேட்டு, எனக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயகாந்தன். தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர். தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல், திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜேகே. தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தார். புதிய படைப்பாளிகளின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார். தற்கால தமிழ் இலக்கியத்துக்கும், தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்க முடியாதது. தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன். அவர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிலைத்து நிற்பார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலையில், இன்று மாலை மோட்ச தீபம் ஏற்ற இருக்கிறார் இளையராஜா.