ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, ரஜினியுடன் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். ஆனால் அதையடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவொரு படமும் அவருக்கு கிடைக்காமல் மும்பைக்கே ரிட்டனாகி விட்டார்.
அவரையடுத்து, இந்தியில் சில படங்களில் நடித்து விட்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்துக்காக மும்பையில் இருந்து இறக்குமதியான இன்னொரு நடிகை அமைரா தஸ்தூர். இவர் அனேகன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினாக நடித்தார்.
அந்த படத்தின் ஆடியோ விழாவின்போது, அமைரா ஒரு லூசு என்று மேடையிலேயே அப்பட டைரக்டர் கே.வி.ஆனந்த் சொன்னபோதும், நல்ல திறமையான நடிகை என்று அவரை புகழ்ந்தும் பேசினார். பின்னர் படம் திரைக்கு வந்தபோதும் அமைராவின் நடிப்பு பேசும்படியாகவே இருந்தது.
ஆனபோதும், தீபிகாவைப்போலவே அமைராவையும் கோடம்பாக்க இயக்குனர்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால் சில மாதங்களாக அவ்வப்போது சென்னைக்கு விசிட் அடித்து சில டைரக்டர்களை சந்தித்து வந்த அமைரா தஸ்தூர், இப்போது சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிக்கொண்டு முழு நேர இந்தி நடிகையாகப்போவதாக மும்பைக்கே பறந்து விட்டார்.