டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் கூறும் இந்த நல்லுலகம் தன்னை 'பொயட்' என்று அழைத்துக் கொள்ளும் தனுஷ் எழுதும் பாடல்களைக் கேட்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது பற்றி என்ன சொல்வது. வித்தியாசம் என்ற பெயரில் அவரும், இசையமைப்பாளர் அனிருத்தும் உருவாக்கும் 'தமிழ்' பாடல்களைப் பற்றி எந்த தமிழ் ஆர்வலர்களும் வாயைத் திறப்பதில்லை. ஒரு 'ஒய் திஸ் கொலவெறி' ஹிட்டால் தன்னையும் ஹிட்டான பாடலாசிரியராக தனுஷ் நினைத்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அவர் எழுதிய பாடல்கள் ஏதோ ஒரு காரணத்தால் ரசிகர்களைச் சென்றடைந்து விட்டதால், அவரும் விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். சொந்தப் படம் எடுத்து நடிப்பவர் சொந்தமாக பாட்டையும் எழுதிக் கொள்வதையும் யார் கேட்க முடியும்.
ஆனால், இப்போது எவ்வளவோ பேர் புதிது புதிதாக அழகு தமிழில் பாடல்களை எழுத வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்புகளை, தனுஷ் தானே பறித்துக் கொள்கிறாரோ என்று கேட்க வைக்கிறது. கடந்த வரும் தனுஷ் நடித்து வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் கூட அனைத்துப் பால்களையும் தனுஷ்தான் எழுதினார். இப்போது அதே டீமுடன் உருவாக்கி வரும் படத்தின் அனைத்துப் பாடல்களையும் தனுஷ்தான் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் நடித்து படப்பிடிப்பு முடிந்துள்ள 'மாரி' படத்தில் கூட தனுஷ்தான் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
தானே தன்னுடைய படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுவதை விட்டுவிட்டு சில பாடல்களை புதியவர்களுக்கும் தனுஷ் கொடுக்கலாமே என சிலர் புலம்புவது தனுஷ் காதில் விழுமா...?