தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் படத்தின் பூஜை அன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து வெளியிடும் ஒரே நிறுவனம் ஏவிஎம் நிறுவனம் தான். அதற்கு பிறகு விஷால் தான் தயாரிக்கும் படங்களின் தேதியை பூஜை அன்றே அறிவித்தார். ஆனால் கடைசியாக ஆம்பள படத்தை ரிலீஸ் செய்வதில் கடும் சிக்கல்களை சந்தித்தார். இதனால் இனி ரிலீஸ் தேதியை முன்கூட்டி அறிவிக்க மாட்டேன். அதனால் பல பிரச்னைகள் வருகிறது. சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்று சொன்னார். ஆனால் தற்போது தான் நடித்து வரும் பாயும்புலி படத்தை வருகிற செப்டம்பர் 17ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: நிறைய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்து விட்டேன். இனி சில காலத்துக்கு போலீசாக நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் சுசீந்திரன் சொன்ன கதை என் முடிவை மாற்றச் செய்து விட்டது. காரணம், இதுவரை வராத போலீஸ் கதை. ஒரு அராத்தான போலீஸ் கதை. அதனால் இதில் நடிப்பதென்று முடிவு செய்து விட்டேன். சுசீந்திரன் படத்தில் நடிக்கும்போது என்னை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் தெளிவாக புரிந்து வைத்திருப்பார். அவர் சொன்னதை நான் செய்தால் போதும்.
ஒரு செட்யூல் முடிந்திருக்கிறது. திட்டமிட்டபடி வேகமாக படம் தயாராவதால் படத்தின் ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்து விட்டேன். அந்த அளவிற்கு எனக்கு படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது. சுசீந்திரன் நம்பிக்கை கொடுத்திருக்கிறார் என்றார்.