இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மணிரத்னம் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணி படம் வருகிற 17ந் தேதி வெளிவர இருக்கிறது. இதில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகும் சூழ்நிலையில் விநியோகஸ்தர் மன்னன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் படத்துக்கு எதிரா புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த கடல் படத்தை வாங்கி வெளியிட்டேன். இதில் எனக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டி வருகிறேன். தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய அளவில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நஷ்டஈடு வழங்கி வருகிறது. அதேபோன்று எனக்கும் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு நஷ்டஈடு பெற்றுத் தரவேண்டும். ஓ காதல் கண்மணி படத்தின் வெளியீட்டுக்கு முன்பு எனக்கு நஷ்டஈடு பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு தன் மனுவில் மன்னன் கூறியுள்ளார்.