டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்த நந்திதா மீண்டும் அவருடன் இணைந்து இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு சில காட்சிகளில் இதுவரையில்லாத இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தி கைதட்டலும் பெற்றிருக்கிறாராம் நந்திதா. அதனால் இடம்பொருள் ஏவல் நந்திதாவின் நடிப்புக்கு புதிய அங்கீகாரம் கொடுக்கும் என்று அப்படக்குழுவினர் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதனால் மிகப்பெரிய பூரிப்பில் இருந்து வருகிறார் நந்திதா. மேலும், தற்போது உப்புக்கருவாடு படத்தில் தன்னைச்சுற்றியே மொத்த கதையும் பின்னப்பட்டிருப்பதால் இன்னும் ஈடுபாடு காண்பித்து அப்படத்தில் நடித்து வருகிறாராம் நந்திதா. அதனால் இந்த படத்திற்கு பிறகு தனக்கு கோலிவுட்டில் பெரிய இடம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார் நடிகை.
ஆனபோதும், இதுவரை தமிழில் 7 படங்களில் நடித்து விட்ட அவர், இன்னமும் சென்னையில் குடியேறாமல் ஹோட்டல் வாசமே மேற்கொண்டு வருகிறார். இதற்கு என்ன காரணம்? என்று நந்திதாவைக் கேட்டால், என் தாய்மொழியான கன்னடத்தில் கிடைக்காத வரவேற்பு எனக்கு தமிழில்தான் கிடைத்திருக்கிறது. அதனால் தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் நான் ரொம்பவே மதிக்கிறேன்.
அதேசமயம், நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே பெங்களூரில் என்பதால், அங்குதான் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அதனால்தான் ரிலாக்ஸ் பண்ண வேண்டும் என்று தோன்றினால் உடனே பெங்களூருக்கு பறந்து விடுகிறேன். அங்கு சென்று எனது ஆத்மார்த்தமான தோழிகளுடன் சில நாட்கள் ஜாலியாக பொழுதை கழித்து விட்டு மீண்டும் சென்னை வருகிறேன் என்று சொல்லும் நந்திதாவுக்கு சென்னையில் நிரந்தரமாக குடியேறும் எண்ணமெல்லாம் துளியும் இல்லையாம். மார்க்கெட் இருக்கிறவரை ஹோட்டலில் தங்கியிருந்து நடித்து விட்டு படங்கள் குறைகிறபோது பெங்களூருக்கு சென்று விட வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருக்கிறாராம்.