தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா ஜிகிர்தண்டா படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இதுதவிர பாம்பு சட்டை, உறுமீன், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எம்.முத்துபாண்டியன், சிம்ஹா மீது பரபரப்பு புகார்களை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டி: நான் திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு சில குறும்படங்களை இயக்கினேன். அப்போது குறும்பட வட்டாரத்தில் இருந்த ஒரு நண்பர் மூலம் பாபி சிம்ஹா அறிமுகமானார். அப்போது அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து அவரை சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன். அவருடன் லிங்கா, பிரபஞ்சயன், சரண்யா, பனிமலர் ஆகியோரும் நடித்தனர். பல கனவுகளுடன் சென்னை வரும் மூன்று இளைஞர்கள் சென்னையில் பெறும் அனுபவங்கள்தான் படம். இதில் சிம்ஹா , இயக்குனர் கனவோடு வரும் இளைஞராக நடித்துள்ளார்.
எனக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக படம் வெளியிட தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு சிம்ஹா, ஜிகிர்தண்டா படத்தில் நடித்து வெளிவந்தது. அதில் அவர் பெரிய உயரத்திற்கு சென்றார். இப்போது என் பட வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால். "என்னோட வேல்யூவே இப்போ வேற படத்தின் பெரிய ஷேர் எனக்கு வேண்டும். அப்போதுதான் டப்பிங் பேசுவேன்" என்றார். அவருக்கு கொடுக்கும் அளவிற்கு பணம் இல்லாததால் நான் வேறொருவரை வைத்து டப்பிங் பேசினேன். இதை அவர் நடிகர் சங்கத்தில் புகாராக கூறினார். நடிகர் சங்கத்தில் நாங்கள் விளக்கம் அளித்து விட்டோம்.
இப்போது எங்கள் படத்தை குறும்படம் என்று விமர்சிக்கிறார். 125 சீன் கொண்ட ஸ்கிபிரிப்டை அவரிடம் படிக்க கொடுத்தோம். 25 நாள் நடித்துக் கொடுத்தார். அப்போது தெரியாத இவருக்கு குறும்படம் என்று. எங்கள் படத்தை கெடுக்க இவ்வாறு கூறுகிறார். சினிமாவில் பணமும், புகழும், விருதும் திடீரென்று வரும். அது சிம்ஹாவின் கண்ணை மறைக்கிறது. யாருமே அவரை திரும்பி பார்க்காதபோது அவருக்கு வாய்ப்பு கொடுத்தவன் நான் என்பதை அவர் மறந்து விட்டார் என்கிறார் இயக்குனர் எம்.மருதுபாண்டியன்.