ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் உள்ள ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ என்ற அமைப்பு ஆண்டுதோறும் சென்னையில் உள்ள பல்வேறு இல்லங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வருகிறது. ஒரு ஆண்டு 10 ஆயிரம் பேரை கிஷ்கிந்தா அழைத்துச் சென்றது, இன்னொரு ஆண்டு திருப்பதி அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தது. ஒரு ஆண்டு சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்றது. இந்த ஆண்டு வருகிற 19ந் தேதி ஆதரவற்ற குழந்தைகளுக்காக இசை அமைப்பளார் தமனை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துகிறது.
இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் விஜய் கோத்தாரி கூறியதாவது: இவ்வாண்டு ஆதரவற்ற குழந்தைகள் 1008 பேரை அழைத்து வந்து அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். இது நிதி வசூல் நிகழ்ச்சியல்ல. கட்டணம் எதுவும் இல்லை. அவர்களை மகிழ்ச்சியூட்ட மட்டுமே இது நடத்தப்படுகிறது. இதில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பிரதானமாக கலந்துகொண்டு பாடி குழந்தைகளுக்கு நேரடி இசைநிகழ்ச்சி அனுபவத்தை தர இருக்கிறார். தனக்கிருக்கும் பரபரப்பான வேலைகள் நடுவே இதற்கு நேரம் ஒதுக்கினார் தமன். கேட்டவுடன் சம்மதித்த அவரது பெருந்தன்மை ஆச்சரிய மூட்டியது. ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் குழுவினர். இசைநிகழ்ச்சியில் கலக்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர்களும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கிறார்கள் என்கிறார் விஜய் கோத்தாரி.