விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மலையாள நடிகர் டாம் சாக்கோவை அறுபது நாள் சிறைவாசம் ரொம்பவே மாற்றியுள்ளது. தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் வாயைத்திறந்து பேசினாலே தத்துவ முத்துக்கள் தான் உதிர்கின்றன. தான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக கூறும் சாக்கோ, ஒரு மனிதனுக்கு சுதந்திரம் தான் உண்மையான போதை என்பதை ஜெயிலில் இருந்த நாட்களில் உணர்ந்துகொண்டாராம்.
“சின்ன வயதிலேயே என் அம்மா புகைபிடிக்காதே, மது அருந்தாதே என என்னிடம் படித்து படித்து சொல்லுவார்கள். ஆனால் நான் அதையெல்லாம் அலட்சியம் செய்தேன். அந்த அலட்சியத்துக்கான தண்டனை தான் இந்த அறுபது நாள் சிறைவாசம்.. வழக்கு விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.. நான் நிரபராதியாக நிச்சயம் விடுதலை ஆவேன்.. அப்போது முழு விபரம் சொல்கிறேன்” என்கிறார் தெளிவுடன்.
அவர் கடைசியாக 'விஸ்வாசம் அதல்லே எல்லாம்' அதாவது 'நம்பிக்கை அதுதானே எல்லாம்' என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தான் கைது செய்யப்பட்டார். “அந்தப்படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.. ஆனால் உண்மை அதுவல்ல. நான் இன்னும் அந்தப்படத்தில் இருக்கிறேன்” என்கிறார் சாக்கோ நம்பிக்கையுடன். இப்போது அவர் பேசுவதற்கும் படத்தின் தலைப்புக்கும் எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா..?