டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழும் தெலுங்கும் வாரிவாரி கொடுத்து ராணியாக அமரவைத்து அழகு பார்த்தாலும் பிறந்தவீட்டு பாசம் இல்லாமல் போய் விடுமா? நயன்தாரா மலையாளத்தில் தற்போது 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற படத்தில் நடித்துள்ளது கூட அப்படித்தான்.. சித்திக் இயக்கிவரும் இந்தப்படத்தில் மெகாஸ்டார் மம்முட்டி தான் ஹீரோ.. மம்முட்டி படம் என்பதுடன், மீண்டும் தாய்மொழியில் நடிக்கப்போகிறோம் அதுவும் சித்திக் இயக்கத்தில் என்கிற சந்தோஷமும் சேர்ந்துகொண்டதால், எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே சம்மதித்தார் நயன்தாரா. இந்தப்படம் முடிவடைந்து இன்னும் ஐந்து நாட்களில் ரிலீஸ் ஆகப்போகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் நயன்தாரா கவனம் செலுத்துவாரா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. நயன்தாரா மலையாளத்தில் நடிக்க விரும்புவது தன்னை வித்தியாசப்படுத்தி காட்டும் கேரக்டர்களில் தான். அப்படி அமைந்தால் நடிப்பதற்கு தடை இல்லை என்கிற நயன்தாரா, தற்போது தமிழில் நிறைய படங்களை ஒப்புக்கொண்டுள்ளதால், அடுத்த மலையாளப்படம் நடிப்பதற்கு இன்னும் கொஞ்ச காலம் எடுத்துக்கொள்வார் என்றே தெரிகிறது.
தவிர சம்பள வித்தியாசமும் நயன்தாராவை யோசிக்க வைக்கிறதாம். தமிழில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா மலையாளத்தில் வெறும் 5௦ லட்ச ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டுதான் நடிக்கிறார். காரணம் அந்த இண்டஸ்ட்ரியின் சூழலும், வியாபார லிமிட்டும் அப்படி.. அதையும் தாண்டி அவர் மலையாளத்தில் நடிக்கவேண்டும் என்றால் நல்ல கதை இருந்தால் தான் சாத்தியம் என்கிறார்கள் நயன்தாராவைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்.