தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தாய்லாந்து பெண்கள் புகார் விவகாரத்தில், போலீசாரின் தீவிர சமரச முயற்சியின் காரணமாக பெண்களை மீண்டும் அவர்களது நாட்டிற்கு அனுப்ப நடிகையின் கணவர் ஒப்புக் கொண்டு, அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த, "தாய் மசாஜ் தெரபிஸ்ட் பயிற்சி முடித்த ஆறு பெண்கள், நேற்று முன்தினம் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். சென்னையில், "3 ஆர் குரூப் நிறுவனத்தில் பணியாற்றும் தங்களை, நிறுவனத்தின் உரிமையாளர்களான ரவீந்திரா (நடிகை யுவராணியின் கணவர்), ரமேஷ் மற்றும் இமானுவல் ஆகிய மூவரும் பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும், மறுத்ததால் உரிய சம்பளத்தை தர மறுப்பதாகவும் புகார் அளித்தனர். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் படி, அசோக்நகர் போலீசிற்கு சென்னை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா பரிந்துரைத்தார். தொடர்ந்து, அசோக்நகர் உதவி கமிஷனர் பரந்தாமன் முன்னிலையில், "3 ஆர் குரூப் நிறுவன உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடந்தது. நடிகை யுவராணியின் கணவரான ரவீந்திராவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தாய்லாந்து பெண்களை மீண்டும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக ஒப்புக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்கள், தாங்கள் பணியாற்றிய மசாஜ் பார்லரில் உள்ள மேலாளர்கள் தான் தங்களை மிரட்டினர் என்று போலீசிடம் கூறியதால், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நடிகையின் கணவர் ரவீந்திரா, "எங்கள் நிறுவனம் சார்பில் சென்னை தவிர பெங்களூரு, மதுரை மற்றும் பல இடங்களில் மசாஜ் பார்லர்கள் உள்ளன. எங்குமே இப்பிரச்னை இல்லை என்று விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.