பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
முன்னாள் கதாநாயகி நடிகையான ரேவதி சென்னையிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து அங்கே செட்டிலான பிறகு தமிழ்ப்படங்களையே மறந்துவிட்டார். மலையாளத்தில் நடித்து வந்தவர் கடந்த சில வருடங்களாக மலையாளத்திலும் அதிகமாக படங்களில் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் மித்ர மை ப்ரண்ட் என்ற ஆங்கிலப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக மாறினார் ரேவதி. அந்தப்படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளைத் தொடர்ந்து, ஃபிர் மிலிங்கே, மும்பை கட்டிங் என இரண்டு ஹிந்திப்படங்களையும் இயக்கினார்.
பின்னர் கேரளா கஃபே என்ற மலையாளப்படத்தையும் இயக்கிய ரேவதி, அப்படத்துக்குப் பிறகு வேறு படங்கள் இல்லை. அதனால் ரேவதி பற்றி ஊடகங்களில் செய்தியும் இல்லை. இதற்கிடையில் நடிப்புக்கு முழுக்குப்போட இருக்கிறார் என ரேவதி பற்றி ஒரு தகவல் அடிபட்டது. தற்போது ரேவதி பற்றி புதிய செய்தி. தனது ஐந்தாவது படத்தை விரைவில் ரேவதி இயக்குகிறார் என்பதே அந்த செய்தி. சிறுகதை ஒன்றை தழுவி இந்தப்படத்தை இயக்க இருக்கிறாராம்.