Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னைப் பற்றி ‌பேச விஜயகுமாருக்கு எந்த அருகதையும் இல்லை - நடிகை வனிதா

04 டிச, 2010 - 10:47 IST
எழுத்தின் அளவு:

நாங்கள் பார்த்த விஷயங்களை எங்கள் குழந்தைகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே என் மகனை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன், என, வனிதா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், விஜயகுமார் மீது கொலை குற்றச்சாட்டு ஒன்றையும் வனிதா கூறியுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா, தங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்னை குறித்து நேற்று மாலை நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் முதல் கணவர் ஆகாஷுக்கு பிறந்த முதல் மகன் விஜய் ஸ்ரீஹரியை, என் தந்தை விஜயகுமார் வீட்டில் இருந்து, அழைத்து வருவது குறித்து, கடந்த மாதம் 7ம் தேதி, எங்களுக்குள் சண்டை வந்தது. அதன் பின், தனியார் மருத்துவமனையில் இருந்து போலீஸ் உதவியுடன் என் மகனை அழைத்து வந்தேன். என் குழந்தையை, மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்துவிட்டதாக கூறியுள்ளனர். குழந்தையை கொண்டு வர தாய், தந்தைக்கு உரிமை உண்டு. என் குழந்தைக்கு ஆபத்து என்றால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன். என் தந்தை, என் குழந்தைக்கு தவறான பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர். அதனால் தான், அவர்களிடம் இருந்து என் மகனை அழைத்து வர விரும்பினேன். மகனை நடிக்க வைக்கவும் முயற்சி எடுத்தனர். அதை நான் விரும்பவில்லை. நான் குழந்தையாக இருந்தபோது, நான் பார்த்து தெரிந்து கொண்ட விஷயங்களை என் மகன் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே நான் அங்கிருந்து என் மகனை வலுக்கட்டாயமாக அழைத்து வர விரும்பினேன்.

எங்க அம்மா மஞ்சுளாவுக்கு திருமணத்திற்கு முன் குடிப்பழக்கம் இல்லை. விஜயகுமார் தான் அம்மாவை குடிகாரி ஆக்கினார். அம்மா சம்பாதித்த பணத்தில் நிறைய சொத்துக்கள் வாங்கப்பட்டன. அவை எல்லாம் இப்போது விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு பெயரிலும், அவரது மகன் அருண் விஜய் பெயரிலும் மாற்றி எழுதப்பட்டுள்ளன. என்னைப் பற்றி பேச விஜயகுமாருக்கு எந்த அருகதையும் இல்லை. என்னைப் பற்றி குறை சொன்னால் நாக்கு அழுகிடும். எங்கள் வீட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து, வாழ்க்கை வெறுத்துப் போய் ஏழு வயதிலேயே தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். பின், 16 வயதில் வீட்டை விட்டு ஓடினேன். காதல் திருமணம் செய்து கொள்ளவும் நினைத்தேன். "டீன் ஏஜ் என்பதால் என் விருப்பத்திற்கு எதையும் செய்து கொள்ள முடியவில்லை. என் மூலம் எந்தெந்த வகையில் வருமானம் வரும் என்று தான் என் தந்தை பார்த்தார். சின்ன தொகை கொடுத்தாலும் போதும் என்று என்னை நடிக்க வைத்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்கவே நான் திருமணம் செய்து கொண்டேன்.

ஆகாஷுடன் நடந்த திருமணம் தவறானது என்று கூற மாட்டேன். திருமணம் விவாகரத்து பெற்றதையும் தவறென்று நினைக்கவில்லை. ஒரு பெண் 25 வயதில் தனியாக இருக்க முடியாது. அதனால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். விஜயகுமார் வீட்டில் என்னென்ன நடக்கிறது என்று எனக்கு எல்லாம் தெரியும். அது பாவப்பட்ட வீடு; பல விஷயங்களை செய்கின்றனர். அந்த வீடு எனக்கு தேவையில்லை. என் அம்மா எல்லாவற்றின் மீதும் ஆசைப்படுவார். இதைப் பார்த்த ஒரு பெரிய இயக்குனர், "உன் அம்மா இறந்தால் அவரது அனைத்து உடைமைகளையும் அவர் கூடவே வைத்து, "மம்மி மாதிரி புதைத்து விட வேண்டும். அப்போது தான் அவரது ஆத்மா சாந்தியடையும் என்றார். அந்த பெரிய இயக்குனரின் பேரை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை.

நடிகைகள் விபசாரம் செய்கின்றனர் என பத்திரிகைகளில் செய்தி வந்ததற்கு விஜயகுமார், "தாம்... தூம்... என்று குதித்தார். அப்படி குதிக்க அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. அவர் அந்த தவறை செய்யவில்லை என்றால், உண்மை என்ன என்பதை நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தபோது, சொந்தமாக, "கை கொடுக்கும் கை, நெஞ்சங்கள் என, இரண்டு படங்களை விஜயகுமார் தயாரித்தார். இரண்டும், "பிளாப் ஆகிவிட்டது. குடும்பத்துடன் அமெரிக்கா போய் விட்டோம். அமெரிக்காவில் 1986ம் ஆண்டு நாங்கள் லாஸ் ஏஞ்சல்சில் இருந்த போது, அருண் விஜயின் அக்கா கவிதாவை வேறு மாதிரி பயன்படுத்தினர். என் அப்பாவின் மேனேஜர் குமாரின் தம்பி சாந்தகுமாரை கவிதா காதலித்தார். இது என் தந்தைக்கு பிடிக்கவில்லை. சாந்தகுமார் ஒரு நாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டு விட்டது. அவர் எப்படி இறந்தார் என்று விஜயகுமாரை கேளுங்கள் தெரியும். இவ்வாறு வனிதா கூறினார்.

ஓடிப் போன காரணம்...! வனிதா, தன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடிப் போனதற்கான காரணம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "எங்கள் வீட்டில் நிறைய விஷயங்கள் நடந்தன. என் அம்மா செய்யச் சொன்ன விஷயங்கள் எதையும் நான் செய்யவில்லை. அப்போது, 18 வயதுக்குப் பின் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற விஷயம் கூட எனக்குத் தெரியாது. அவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல் தான் வீட்டை விட்டு வெளியேறினேன். என் தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன். என்னை அங்கிருந்து அழைத்து வந்து, வீட்டில் அடைத்து வைத்து அடித்தனர்.

சமரசம் இல்லை: விஜயகுமார் பேட்டி: சென்னை மதுரவாயலை அடுத்துள்ள ஆலப்பாக்கம் வீட்டில், நடிகர் விஜயகுமார் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: என் இரண்டு மனைவிகளுக்கு பிறந்தது ஆறு குழந்தைகள். நான் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்று இருந்தேன். என் மகன் அருண் விஜய், நவம்பர் 22ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றான். என் மருமகன் ஹரியும் சூட்டிங்கில், "பிசியாக இருக்கிறார்; யாரும் தலைமறைவாக வில்லை. வனிதா எனக்கு பிறந்த மகள் தான். என்னைப் பற்றிய ரகசியத்தை வெளியிடுவதாகச் சொல்கிறார். ரகசியம் என்று ஒன்றுமில்லை. அவதூறு பரப்பி வரும் வனிதாவிற்கும், எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. அவருடன் சமரசமோ, சமாதானமோ கிடையாது. இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

மூல காரணம் மூடி மறைப்பு: "நடிகர் விஜயகுமாரின் ரகசியத்தை வெளியிடுவேன் என வனிதா கூறி வந்தார். பிரச்னைக்கான மூல காரணத்தை வனிதா தரப்பிலும் முழுமையாக தெரிவிக்கவில்லை; விஜயகுமாரும் அவரது பேட்டியில் கூறவில்லை. தொடர்ந்து விஜயகுமார் பேட்டியின் போது, "என்னைப் பற்றி சொல்வதற்கு ரகசியம் ஒன்றும் இல்லை என, திரும்பத் திரும்ப கூறினார். இரு தரப்பிலும் ஏற்பட்ட பிரச்னைக்கு பெரிய அளவில் காரணம் உள்ள நிலையில், அதை இருவருமே மூடி மறைக்கின்றனர்.

வனிதா வசம் விஜய் ஸ்ரீஹரி: விஜயகுமாரின் குடும்ப பிரச்னையின் மையப்புள்ளியாக உள்ள, வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி, முதல் கணவர் ஆகாஷிடம் இருப்பதாக கூறப்பட்டது. அது பற்றி ஆகாஷிடம் நேற்று தொடர்பு கொண்டு கேட்ட போது, "விஜய் ஸ்ரீஹரி சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள என்னிடம் தான் 7ம் தேதி முதல் இருந்தான். இந்நிலையில், வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு நான் அலுவலகம் சென்றிருந்த போது, வனிதா என் வீட்டிற்கு வந்து விஜய் ஸ்ரீஹரியை அழைத்துச் சென்றுள்ளார். நான் வனிதாவை தொடர்பு கொண்டு, அவனை அழைத்து வந்து என்னிடம் விடும்படி கூறியுள்ளேன் என்றார்.

"தைரியசாலி என்பதால் என்னை பிடிக்கவில்லை: வனிதா பேட்டியின்போது, "என் அம்மாவை விஜயகுமார் இரண்டாவதாக, சட்ட விரோதமாக திருமணம் செய்து விட்டு, எங்கள் வீட்டில் அடிச்ச கூத்து எங்களை மிகவும் பாதித்தது. என் வீட்டில் நடக்கும் விஷயங்களை நான் ஒருத்தி தான் தைரியமாக எதிர்த்து கேட்பேன். அதனால், என்னை யாருக்கும் பிடிக்காது. நான் நல்ல பெண்ணாக இருந்ததால், அவர்கள் சொல்வதற்கு, "முடியாது என, அழுத்தமாக பதில் சொன்னேன். அதனால் பிரச்னையும் அதிகமாகிவிட்டது. என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், சீதா தேவியாக இருந்தால், தீயில் விழுந்து கூட தன்னை உத்தமியாக நிரூபிக்கட்டும் என்றார்.

Advertisement
கருத்துகள் (67) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (67)

rafi - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஆக, 2011 - 05:41 Report Abuse
 rafi சினிமா ல இது எல்லாம் சர்வ சாதாரணம் டா சாமீ அதை போய் பெரிய விஷயமாக எடுத்து என்னை போன்ற பைத்தியக்காரன் உடைய கமெண்ட்ஸ் வேற போதுமட சாமீ ஆளை விடுங்க
Rate this:
Billa - kizhakku veedhi,ஜப்பான்
16 ஜன, 2011 - 18:47 Report Abuse
 Billa ராஜ்கிரண் பாவம் உங்கள சும்மா விடாது. பாவம் அந்த ஆளு கிட்ட "எல்லாத்தையுமே" கரந்துவிட்டீர்கள். "Dirty " family
Rate this:
maduri - -,இந்தியா
15 ஜன, 2011 - 00:19 Report Abuse
 maduri என்ன வேணாம் நடந்திருக்கலாம்..யாரையும் ஒன்னும் சொல்ல முடியாது..எல்லாரும் இனிமேலாவது திருந்தி அவங்கவங்க ஓழுங்கா இருந்தா சரி...இப்படி பப்ளிக் ஆ யாரும் யார பத்தியும் பேச வேண்டாம் பிளஸ்..
Rate this:
srinivasan - coimbatore,இந்தியா
13 ஜன, 2011 - 23:24 Report Abuse
 srinivasan நடிகை என்பதினால் தானே இவ்வளவு விறுவிறுப்பு . எல்லாருக்கும் ஒரு குடும்பம் உள்ளது . என்னை பொறுத்தவரை இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் .
Rate this:
mamu - pondy,ஐஸ்லாந்து
13 ஜன, 2011 - 16:04 Report Abuse
 mamu பெட்டெர் புட் இட் இன் வெப்சைட் போர் தேம செபரடேலி
Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in