தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர்களை போலவே நடிகைகளும் தங்கள் பிள்ளைகளை ஹீரோவாக்குவதற்கு தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பல படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர் மீரா கிருஷ்ணன். தற்போது இரு காதல் ஒரு கதை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் மீரா வீட்டுக்கு சென்றுருக்கிறார். அப்போது ஆறடி உயரத்துக்கு குறையாத ஒரு வாலிபரை கண்டார். அவரை கண்ட இயக்குனர், மேடம் இந்த பையன் யாரு சினிமாவில் நடிப்பாரா ?என்று கேட்டதும் என் மகன்தான் இப்போதுதான் பிளஸ்டூ முடித்திருக்கிறான். இருந்தாலும் வீட்டில் தங்காம பைக்கை எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போயிடுவான் இவன் நடிப்புக்கு சரிவரமாட்டான். பேசாம படிப்பில் கவனம் செலுத்தட்டுமே என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். வாய்ப்பு வரும்போது பயன்படுத்துங்க.. பிறகு கிடைக்காது என்று இயக்குனர் சொல்லியதும் கணவன் சம்மதத்தோடு தன் மகனை இரு காதல் ஒரு கதை படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்கவைத்து சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் மீராகிருஷ்ணன். கூடவே நடிப்பையும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். தியாகராஜன். என்ற பெயரை சினிமாவுக்காக ஆதி என்றும் மாற்றியுள்ளார்.