டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்-தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிந்து மாதவி விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் அவர் இறந்து விட்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வௌியானது. இதுப்பற்றி கேள்விப்பட்ட பிந்து மாதவி அய்யய்யோ... நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஆந்திராவில் யாரோ என் பெயரை உடைய ஒரு பெண் விபத்தில் சிக்கி இருக்கிறார். அவரது பெயரும் பிந்து மாதவி என்பதால் அதை நான் தான் என்று நினைத்து இப்படியொரு தப்பான செய்தியை பரப்பிவிட்டார்கள். நான் பூரண உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதற்குள் என்னை கொன்று விடாதீர்கள், தற்போது நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.