'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தக் காலத்தில் ஒரு படத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் பெரிய வேலையாக இருக்கிறது. அதிகப்படியான பிரமோஷன் ஒரு படத்திற்குத் தேவைப்படுகிறது என்பது மட்டும் உண்மை என்பதை திரையுலகத்தினரே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒரு பக்கம் ஊடகங்களில் செய்திகள் வந்தால் கூட அது போதவில்லை, அதற்கும் மேலும் ஏதாவது ஒன்று செய்து படத்தைப் பற்றிப் பரபரப்பாகப் பேச வைக்க வேண்டும் என்பதுதான் சிலரின் எண்ணமாக இருக்கிறது. அதை பாசிட்டிவ்வாகவோ, நெகட்டிவ்வாகவோ செய்து படத்தைப் பற்றிப் பேச வைப்பதை தற்போது சிலர் கையாண்டு வருவதாகத் தெரிகிறது. இந்த முறையில் பாலிவுட்டில்தான் படங்களைப் பற்றிப் பரபரப்பாகப் பேச வைப்பார்கள்.
கடந்த சில வருடங்களாக கோலிவுட்டிலும் இப்படிப்பட்ட முறைகளை கையாள ஆரம்பித்துவிட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களே, படத்தின் ஆடியோவை இன்டர்நெட்டில் லீக் செய்துவிட்டு, எங்களது படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் ஆடியோவை திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டார்கள் என்று சொல்லிய சம்பவங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் பின் அப்படிப்பட்ட புகார் என்ன ஆனது என்பதும் தெரியாமல் போய்விடும். அப்படியே டிரைலர், டீசர் என்று தொடர ஆரம்பித்தது.
அடுத்து, படத்தில் நடிக்கும் நடிகருக்கும், இயக்குனருக்கும் மோதல், நடிகைக்கும் இயக்குனருக்கும் மோதல் என்று செய்திகளைப் பரப்புவார்கள். சில படங்களுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து, வழக்கையும் தொடுக்க, அதன் பின் அந்தப் படத்திற்கு எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத விளம்பரம் கிடைத்து விடும். இப்படித்தான் 'விஸ்வரூபம்' படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் அந்தப் படத்திற்கு பரபரப்பான ஓபனிங் கிடைத்தது. ஆனால், 'தலைவா' படத்திற்கு எழுந்த பிரச்சனையை அடுத்து அந்தப் படக்குழுவினரால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது.
இப்போது சில அரசியல் காரணமாக 'கொம்பன்' படத்தை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டது. அதுவே அந்தப் படத்திற்கு மிகப் பெரிய பிரமோஷனை தேடிக் கொடுத்துவிட்டது. இதனால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வலாக உள்ளனர் என திரையரங்க வட்டாரங்களிலேயே தெரிவிக்கிறார்கள். இதனால் நேற்று மாலை ஆரம்பமான படத்தின் முதல் காட்சிக்கே மிகப் பெரிய ஓபனிங் இருந்தது என்கிறார்கள். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். யாரோ எதையோ நினைக்கப் போக நடந்தது வேறு ஒன்றாகிவிட்டது.