வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் தற்போது பரபரப்பான நாயகியாக இருந்து வரும் நயன்தாரா தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறர். சிம்புவுடன் ஜோடியாக நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பை எப்போதோ முடித்துக் கொடுத்து விட்டார். இப்போது சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் மாஸ் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம். தற்போது தனியொருவன், நானும் ரௌடிதான், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள மாயா படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இத்தனை படங்களில் இன்று நண்பேன்டா வெளிவருகிறது. மே மாதம் இது நம்ம ஆளு, மாஸ் ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. அதன் பின் மற்ற படங்கள் வெளி வருகின்றன.
இதனிடையே, மீண்டும் தெலுங்குப் படங்களில் நடிக்க அவரைத் தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். ஸ்ரீராமராஜ்யம் படத்திற்குப் பிறகு மீண்டும் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். மம்முட்டியுடன் நடித்துள்ள பாஸ்கர் தி ராஸ்கல் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. ஆக, மீண்டும் தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் நயன்தாரா. தற்போதுள்ள இளம் நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு நயன்தாராவிற்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.