டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு |
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், வடிவேலு, ஏறக்குறைய திரையுலக வன வாசம் போய் விட்டார் என்றே கூறலாம். அரசியல் காரணங்களால், அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு, தயாரிப்பாளர்கள் தயங்கினர். இடையில் வெளியான தெனாலிராமன் படமும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இப்போது, மீண்டும், எலி படத்தின் மூலம் கோலிவுட் பக்கம் வடிவேலுவை காண முடிகிறது. இந்த படத்தில் வடிவேலுவுக்கு சண்டை காட்சிகள் எல்லாம் உள்ளதாம். அதற்காக, தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என, உறுதியாக நம்புகிறார் வடிவேலு. இதனால், இனிமேல் நடித்தால், ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்றஉறுதியுடன் இருக்கிறாராம்.