கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கவிஞர் மதன் கார்க்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் எழுதியுள்ளார். இதில் பல பாடல்கள் வெற்றியும் பெற்றுள்ளது இந்நிலையில் முதல் முறையாக கராத்தேக்காரன் என்ற படத்துக்கு பாடல்கள் எழுதி மூன்று மொழிகளில் வசனம் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், வியட்நாம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பைட் மாஸ்டராக இருந்த ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். இதுபற்றி மதன் கார்க்கியிடம் கேட்டபோது ஒரு படத்துக்கு வசனம் ரொம்பவும் முக்கியம் நீளமான வசனங்கள் இருந்தால் ரசிக்கமாட்டார்கள். அதே நேரத்தில் தேவையான இடத்தில் சரியான வசனம் இருந்தால் படத்திற்கு பலமாக இருக்கும். படத்திற்கு எனக்கு தெரிந்த வரை சிறப்பாக எழுதிக்கொடுத்திருக்கிறேன் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து எழுதுவேன் என்கிறார் கார்க்கி.