தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முதன்முறையாக விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ள படம் புலி. சிம்புதேவன் இயக்கும் இப்படம் பேண்டசி படமாக உருவாகி வருகிறது. ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகி வரும் கார்த்தி-நாகர்ஜூனா படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் திடீரென அவர் அப்படத்திலிருந்து விலகி வேறொரு படத்தில் கமிட்டாகிவிட்டதாகவும், இதுதொடர்பாக ஸ்ருதியின் மேல் அந்தப்பட நிறுவனம் வழக்கு தொடர்ந்தது உள்ளிட்ட பிரச்னைகள் போய் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக ஸ்ருதிஹாசனை பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவிக்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதுப்பற்றி புலிப்படத்தின் தயாரிப்பாளர்கள் சிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் ஒரு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, எங்களது தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தில், ஸ்ருதிஹாசன் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடிக்க உள்ளார். தற்போது ஸ்ருதி தமிழில் புலி, இந்தியில் கப்பர், தெலுங்கில் ஸ்ரீமந்துரு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். புலி படத்தை பொருத்தமட்டில் சொன்ன தேதியில் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். அர்ப்பணிப்போடு அவர் நடிப்பதை பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவே பாராட்டி வருகிறது. கமல்ஹாசனின் கமல் என்ற துளி பந்தாவும் இல்லாமல் அவர் எளிமையோடு நடந்து கொள்வது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
புலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தலக்கோணம் சுற்றுலா பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டு மாதகாலம் பணிபுரிந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் ஸ்ருதி நடிக்கவில்லை என்றால் மே மாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவார்கள். இதனால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டிய சூழல் வரும். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று ஸ்ருதியிடம் கூறினோம். எங்களது நிலைமையை புரிந்து கொண்டு ஸ்ருதியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை இங்கு தௌிவுப்படுத்தி கொள்கிறோம். மேலும் தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளை எங்களுக்காக விட்டு தந்த ஸ்ருதிக்கும் இந்த நேரத்தில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.