‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சென்னையில் தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சியில் டப்பிங் பேசும் கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத்தை வாங்கிக் கொடுப்பது டப்பிங் யூனியன்தான். அப்படி கொடுக்கும்போது அதில் 10 சதவிகிதத்தை சங்கம் பிடித்தம் செய்து கொள்கிறது.
இதனை எதிர்த்து ஜெ.மதியழகன், ஆர்.மகாலட்சுமி, பி.ஆர்.கண்ணன் என்கிற டப்பிங் கலைஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் "எங்கள் சங்கத்தில் 1608 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் 10 சதவிகித்தை யூனியன் பிடித்துக் கொள்கிறது. இது கடந்த 2014ம் ஆண்டுமுதல் நடந்து வருகிறது. சங்கத்தின் துணை விதியின் படி இப்படி சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறினார்கள். அப்படி எந்த துணை விதியும் இல்லை என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிந்திருக்கிறோம்.
டப்பிங் கலைஞர்களுக்கான சம்பளத்தை பெரும் தொகையாக வசூலித்து விட்டு சிறு தொகையையே கலைஞர்களுக்கு தருகிறார்கள். பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீதும் வழங்கப்படுவது இல்லை. இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் புகார் அளித்தோம். அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. எனவே டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்தோடு வருகிற 8ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டப்பிங் யூனியனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.