'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர். சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவருக்கு, சன்னி லியோன் மேலாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடு்த்திருந்தார், அந்த போட்டோ, பின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த போட்டோ, மக்காவ் தீவில் எடுக்கப்பட்டதாகவும், வைர வியாபாரிகள் தங்களது வர்த்தக விளம்பரத்திற்காக, அந்த போட்டோவை பயன்படுத்தியிருந்தனர். இதுதொடர்பாக, சன்னி லியோன் மீது சூரத் போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். சன்னி லியோன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிக்காக, சூரத் சென்றிருந்த சன்னி லியோன், கடைசி நேரத்தில், நிகழ்ச்சியின் இடத்தை மாற்றியதில், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.