அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தயாரிப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட லக்ஷ்மி மஞ்சு தற்போது, பாடகியாகவும் தன்னை நீருபிக்க ஆர்வம் கொண்டுள்ளார். தன்னுடைய சாந்தம்மா காததாலு என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்ததால் மகிழ்ச்சியில் காணப்படும் நடிகை லக்ஷ்மி மஞ்சு, தற்போது இயக்குநர் வம்ஷி கிருஷ்ணா இயக்கத்தில், "தொங்காடா" என்ற திகில் படத்தில் நடித்து வருகின்றார்.
நடிகை லக்ஷ்மி மஞ்சுவின் சொந்த தயாரிப்பின் கீழ் உருவாகி வரும் இப்படம், கடத்தல் சம்பந்தப்பட்ட கதைக்களம் கொண்ட திகில் படம் என்று கூறப்படுகின்றது. தெலுங்கு திரையில் வெற்றிப் பாடல்களைக் கொடுத்து வரும் இசையமைப்பாளர் ரகு குன்சே இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகை லக்ஷ்மி மஞ்சு ஒரு பாடலை பாடியுள்ளார். இதனால் விரைவில் திரைக்கு வரும் இப்படத்தினை தயாரிப்பாளராக மட்டுமல்லாது அறிமுக பாடகியாகவும் நடிகை லக்ஷ்மி மஞ்சு ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்.