ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால் அவரது திரை உலக வாழ்க்கையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த வகையில் அவர் நடிப்பதாக ஒப்புக் கொண்ட கபார் சிங் 2 திரைப்படமும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருகின்றது. இதனால் வருத்தத்தில் இருந்த நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.
தெலுங்கு திரை ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் கபார் சிங் 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளனவாம் இதுவே ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்க இருக்கின்றது என தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும் இப்படத்தை இயக்குநர் சம்பத் நந்தி இயக்குவதாக இருந்தது, ஆனால் பவர் படத்தை இயக்கிய இயக்குநர் ரவீந்திரன் தற்போது இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.