பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
பல்வேறு தெலுங்கு திரை பிரபலங்களுக்கு தேர்தலில் பங்கெடுத்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவுகள் இன்று 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.