டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உலக நாயகன் நடிகர் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெலுங்கு மற்றும் தமிழில் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகியதால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நீதிமன்றம் சென்றதாகவும், ஸ்ருதிஹாசன் மறு உத்தரவு வரும்வரை எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட கூடாது என நீதிமன்றம் உத்தரவு இட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இந்த தகவலை ஸ்ருதிஹாசன் தரப்பு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் விலகியதால் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர முயற்சிகள் செய்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இதுவரை எவ்வித வழக்கும் நீதிமன்றத்தில் பதிவாகவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தெலுங்கு நடிகர் சங்க தலைவருமான நடிகர் முரளிமோகன் நடிகை ஸ்ருதிஹாசன் கேட்டுக் கொண்டதால் இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நிறுவனத்துடன் பேசி வருவதாக தெரிகிறது.