டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரு படம் படப்பிடிப்பு ஆரம்பமாவதிலிருந்து அதைப் பற்றிய பல செய்திகள் வந்தாலும் அப்போதெல்லாம் கண்டு கொள்ளாமல், பட வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன் அந்தப் படத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக சிலர் எதிர்க்க நினைப்பது திரையுலகத்திற்குள் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்ட 'கொம்பன்' படப் பிரச்சனைக்காக நேற்று தமிழ்நாடு திரையுலகக் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
வெளியீட்டிற்கு முன்னர்தான் வழக்கு தொடுப்பது, அப்போதுதான் பிரச்சனைகளைக் கிளப்புவது பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் படத்திற்கு எவ்வளவு பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும் என்று அவர்கள் நேற்று விவரித்தனர்.
இந்த நிலையில் 'கொம்பன்' படத்தின் நாயகன் கார்த்தியின் அண்ணன் சூர்யா இது குறித்து தெரிவித்துள்ளதாவது, “கொம்பன்' படம் அழகான உறவுகளைப் பற்றிய படம். படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஏன் இப்படி திடீரென உணர்வுபூர்வமான நிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை,” என அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பிரச்சனைக்கு ஆதரவளித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், மீடியாக்கள், ரசிகர்கள் ஆகியோரின் மனமார்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்சார் போர்டு முடிவை ஏற்றுக் கொண்டு, அதற்கு மரியாதை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.