பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அபிஷேக் பச்சன், தற்போது உமேஷ் சுக்லா இயக்கும், ''ஆல் இஸ் வெல்'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இவர் படப்பிடிப்பில் இருந்தபோது ஷூட்டிங் முடித்துவிட்டு ஓய்வில் இருந்தார். அப்போது அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து விளையாடி மகிழ்வதை கண்டார். இதை பார்த்ததும் உற்சாகமான அபிஷேக் பச்சனும் மாணவர்களுடன் விளையாட தொடங்கிவிட்டார்.
அபிஷேக் பச்சன் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கூடைப்பந்து விளையாட்டில் அலாதி பிரியம் கொண்டவர். சின்ன வயதில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறார். சமீபத்தில், மாடிசன் ஸ்குயர் கார்டனில் நடந்த என்பிஏ., விளையாட்டு போட்டியின் தூதராக இருந்தார். மேலும் அங்கு ஐந்து நாட்கள் தங்கி விளையாட்டு வீரர்களுடன் தனது பொழுதையும் கழித்ததோடு அவர்களோடு விளையாடியும் மகிழ்ந்துள்ளார் அபிஷேக்.