‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'லிங்கா' பிரச்சனை தொடர்பாக நாளுக்கு நாள் வரும் அறிக்கைகளைப் பார்த்து ஏன்தான் இப்படி ஒரு படத்தை எடுத்து நடித்தோமோ என்று ரஜினிகாந்த்தே வருத்தப்பட்டுப் போயிருப்பார். படம் ஆரம்பமான நாளிலிருந்தே பிரச்சனை மேல் பிரச்சனையாக தொடர்ந்து ஷுட்டிங் நடந்து முடிந்து ஒரு வழியாக ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று படம் வெளிவந்தது.
வெளியான சில நாட்களுக்குள்ளேயே படம் மாபெரும் தோல்வி என படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களே அறிவிக்காத குறையாக எங்களுக்கு நஷ்டத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று ஆரம்பித்தனர். தொடர்ந்து எவ்வளவு செய்தும் அந்தப் பிரச்னை இதுவரை முடியாமல் இழுவையோ.....இழுவை...என இழுத்துக் கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்தும் ஒரு வழியாக நஷ்டத்தில் குறிப்பிட்ட தொகையைத் தர சம்மதித்து கடந்த வாரம் அதற்கான தொகையையும் கொடுத்து விட்டார். ஆனால், அந்தப் பங்கைப் பிரிப்பதில் தொடர்ந்து தகராறு மேல் தகராறு நடந்து கொண்டு வருவதாக திரையுலகத்தினரே கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
இத்தனை நாட்களாக இந்தப் பிரச்சனை குறித்து , இது வரை கருத்து சொல்லாதிருந்த தமிழ்நாடு, கேரளா வினியோக உரிமையை வாங்கிய வேந்தர் மூவீஸும் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தியேட்டர்காரர்கள், மீடியேட்டர்கள், வினியோகஸ்தர்கள், படத்தைத் தயாரித்தவர்கள், தற்போது பஞ்சாயத்து பேசி வரும் சங்கத்தினர் என அனைவருமே இந்தப் பிரச்சனையை நல்ல படியாக முடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.