இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' |
ஒரு காலத்தில் படத்தின் தலைப்பு மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் இல்லையென்றால் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள். என்னோட படத்துக்கு புதிய வார்ப்புகள் என்று தலைப்பு வைத்தபோது, இது என்ன வார்ப்புகள் மக்களுக்கு இந்த வார்த்தை புரியுமா என்றார்கள். இப்போது எப்படியெல்லாம் படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது. என் சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் மாறி வருவோம் என்று வயா மீடியாவில் நிழல்கள் படத்தை எடுத்தேன். படம் தோற்றது. அதற்கு பிறகு என் பாதையை மாற்றி கொண்டேன். ஆனால் இப்போது இளைஞர்கள் புதுசு புதுசாக சிந்தித்து படங்கள் எடுக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அதே நேரத்தில் மூத்த கலைஞர் என்னை ஜாம்பவான் என்று அழைக்கிறார்கள். இனி அப்படி என்னை கூப்பிடவேண்டாம். என்னை விட ஜாம்பவான்கள் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் ஜாம்பவான்கள். சினிமாவுக்கு ஒப்பனை அவசியம் தேவை. இப்போது அது தேவை இல்லை என்கிற ஒரு நிலையை படைப்பாளிகள் உருவாகி விட்டார்கள். அவர்கள் தான் ஜாம்பவான்கள் என்கிறார் இயக்குனர் பாரதிராஜா.