அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சினிமாவில் வெற்றி விழா கொண்டாடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. காரணம் இப்போது எந்தப் படமும் 50 நாள், 100 நாள் ஓடுவதில்லை. சில பெரிய ஹீரோக்கள் படம் ஓட்டப்பபடுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான என் வழி தனி வழி படம் கமலா தியேட்டரில் 25 நாள் ஓடியது. இதனை கொண்டாடி மகிழ்ந்தார், படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான ஆர்கே.
விழாவில் ஆர்கே பேசியதாவது: கடந்தசில ஆண்டுகளாகவே சினிமா சிரமத்தில் இருப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிறைய படங்கள் வருகின்றன. நிறைய படங்கள் தோல்வி அடைகின்றன. ஓடுவதில்லை. சூப்பர் ஸ்டாரிடமே பணத்தை திருப்பிக் கேட்கிற நிலை உள்ளது. வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களுக்கே திரையரங்கிற்கு யாரும் வருவதில்லை. நாலாவது நாள் நல்லபடம் என்று கேள்விப் பட்டுப் பார்க்கப் போனால் கூட, படம் திரையரங்கில் இருப்பதில்லை.
எல்லா வியாபாரத்திலும் விழா, பண்டிகை காலங்களில் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள். சினிமாவில் மட்டும் பண்டிகை காலங்களில்,100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் ஆகும். 3 நாள் பொறுத்துக் கொண்டால் 4 வது நாள் திருட்டு விசிடி வந்துவிடும். 25 ரூபாயில் பார்த்து கொள்ளலாம் என்று திரும்பி வந்து விடுகிறான். அவனைத் திருட்டு விசிடி வாங்கவைத்தது நாம்தான். சினிமாவில் அணுகுமுறை மாற வேண்டும். இதுவரை பணக்காரர்களிடம் இருந்த சினிமா வியாபாரம் இனி ஏழைகள் பக்கம் போகட்டும்.
இவ்வாறு ஆர்கே பேசினார்.
விழாவில் என்வழி தனி வழி இயக்குநர் ஷாஜி கைலாஷ், கதை வசனகர்த்தா பிரபாகர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் ராதாரவி,மதன்பாப், தலைவாசல்விஜய், வழக்கு எண் முத்துராமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் ஞானவேல், இயக்குநர்கள் சுசீந்திரன், தசெந்தில்நாதன் ,பாடலாசிரியர் இளைய கம்பன், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.