பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது. இது இல்லாமல் அது இல்லை, அது இல்லாமல் இது இல்லை என்றாகிவிட்டது. இப்போது 'கொம்பன்' படத்திற்காக எழுந்துள்ள பிரச்சனைகளைப் பார்க்கும் போது மீண்டும் தமிழ்த் திரையுலகத்தில் அரசியல் நுழைந்து விட்டதோ என்று யோசிக்க வைக்கிறது. கோலிவுட் வட்டாரங்களில் இது பற்றித்தான் பேச்சு அதிகமாக எழுந்துள்ளது. 'கொம்பன்' வருகையை 'நண்பன்'தான் தடுக்கிறார் என்று பேசிக் கொள்கிறார்கள்.
கோடை விடுமுறை ஆரம்பமாக உள்ள நிலையில் தமிழ்த் திரையுலகில் கொண்டாட்டமாக ஏப்ரல் 2ம் தேதி 'கொம்பன், நண்பேன்டா, சகாப்தம்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. இவற்றில் 'கொம்பன்' படம் தன்னுடைய படத்துக்கு கடுமையாக போட்டியை ஏற்படுத்தும் என்று கருதிதான் 'நண்பேன்டா' படக்குழு 'கொம்பன்' படத்தை போட்டியிலிருந்து விலக்கி வைக்க அரசியல், சாதி என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினின் இரண்டாவது படமான 'இது கதிர்வேலன் காதல்' படம் தோல்வியடைந்ததால் இப்போது அவர் நடித்து வெளிவர உள்ள 'நண்பேன்டா' படம் வெற்றி பெற்றால்தான் அவர் திரையுலகத்தில் தொடர்ந்து நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அதனால், இந்தப் படம் வரும் போது அவர் எந்த போட்டியையும் விரும்பவில்லை என்கிறார்கள். 'கொம்பன்' படம் ஒரு வாரம் கழித்து வந்தால், தங்களுக்கு எந்த போட்டியு இருக்காது என்று நினைக்கிறார்களாம். சமீபத்தில் நடந்த சில அரசியல் சந்திப்புக்களையும் இதற்கு திரையுலகத்தினர் மேற்கோள் காட்டுகிறார்கள். 'நண்பேன்டா' என பெயர் வைத்துக் கொண்டு திரையுலகத்திலேயே தனக்கு நட்பானவர்களுடன் இப்படி 'நட்பு' பாராட்டுகிறார்களே என திரையுலகத்தினரே வாயடைத்துப் போயுள்ளார்களாம்.