'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கொம்பன் படம் வெளியிட தடை கோரிய வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு படத்தை பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
டிரைலர் ரிலீஸ்:
மதுரை கிளையில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு: ஞானவேல் ராஜா தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் வெளியாக உள்ள, கொம்பன் படத்தின் டிரைலர், மார்ச் முதல்வாரம் வெளியானது. படத்தின் பெயரே, வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இரு சமூகத்திற்கு இடையே, 100 ஆண்டுகளாக நிலவும் பிரச்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற படங்கள், மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சினிமா துறையில் உள்ள என் நண்பர்கள், படத்தின் வசனங்கள், காட்சிகள், இரு சமூகத்தினரை மற்றும் இரண்டு தேசிய தலைவர்களை, மறைமுகமாக அவமதிக்கும் வகையில் உள்ளது என்றனர். இதையடுத்து, படத்திற்கு சான்றிதழ் அளிக்கக்கூடாது என, மண்டல திரைப்பட தணிக்கைக்குழு தலைவரிடம் மனு அளித்தேன். மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவருக்கு படத்தை அனுப்பினர். படத்தை விரைவில் வெளியிட ஏற்பாடு நடக்கிறது. படம் வெளியானால் சமூக அமைதி பாதிக்கும்.
தடை வேண்டும்:
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்கவும், தியேட்டர்களில் படம் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். நீதிபதிகள் முன் படத்தை திரையிட்டு, தணிக்கை வாரிய வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, படம் எடுக்கப்படுள்ளதா என, முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.
படத்தை பார்க்கணும்:
மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய, பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மற்றும் அவரது தரப்பில் மூன்று வழக்கறிஞர்கள், தயாரிப்பாளர் மற்றும் அவரது தரப்பில் மூன்று வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய குழு, 31ம் தேதி (இன்று) காலை, 8:00 மணி முதல், 10:00 மணிக்குள், சென்னையில் படத்தை பார்க்க வேண்டும். பின், படம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.