சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான கொலை வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2002ல் நடந்த விபத்துக்கு காரணமான காரை, சல்மான் ஓட்டவில்லை என்றும், அவரின் டிரைவர் அந்த காரை தானே ஓட்டியதாகவும், கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த, 2002ல், மும்பை நகர வீதியில் தாறுமாறாக ஓடிய பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கார், சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில், ஒருவர் பலியானார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த மும்பை போலீசார், சல்மான் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கடந்த, 13 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் மும்பை கோர்ட்டில் ஆஜரான, சல்மான் கானின் கார் டிரைவர் அசோக், விபத்து நடந்த அன்று, அந்த காரை, சல்மான் கான் ஓட்டவில்லை என்றும், தானே அந்த காரை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவித்தார். இவ்வாறு கூறுவதற்காக, சல்மான் கான் தனக்கு பணம் கொடுக்கவில்லை எனவும், தான் யாராலும் மிரட்டப்படவில்லை என்றும் கூறினார். டிரைவர் அசோக்கின் வாக்குமூலத்தால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.