இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உண்மையிலேயே பிரச்னைதானா, அல்லது பிரச்னை போல விளம்பரப்படுத்துகிறார்களா, இல்லை உண்மையிலேயே சமாதானம் ஆகிறார்களா என்றுதான் சில சர்ச்சைகளைப் பார்க்கும் போது கேட்க தோன்றுகிறது. தெலுங்குத் திரையுலகில் பிரபல நிறுவனமான பிவிபி சினிமாஸ் தயாரிக்க நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிக்க தமிழ், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்று சில வாரங்களுக்கு முன் ஆரம்பமானது. ஆனால், கடந்த வாரம் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக திடீரென ஸ்ருதிஹாசன் தங்களுக்கு சொன்னதாகவும், அதனால் அவர் மீது வழக்கையும் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த்து. அதையடுத்து ஸ்ருதிக்கு புதுப் படங்களில் ஒப்பந்தமாக நீதிமன்றம் தடைவித்தது.
அதன் பின் அந்தப் படத்தில் தமன்னாவை நடிக்க வைக்கக் கூட முயற்சிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய நிலையை இறுக்கமாகவே வைத்துக் கொண்டதால் வழக்கு போன்ற விஷயங்கள் எதற்கு என ஸ்ருதிக்கு நெருக்கமான சிலர் ஆலோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்துடன் சமரச முயற்சியில் ஸ்ருதிஹாசன் இறங்கினாராம். கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து தருவதாகவும், அதற்கேற்றபடி படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என ஸ்ருதி தெரிவித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் மேற்கொண்டு சமரசம் ஏற்படே வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். அதை, தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும்தான் முடிவு செய்வார்கள் என்கிறார்கள். சில நாட்களில் இது பற்றிய அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.