ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு நடிகராக ஜெயிக்க வேண்டும் என்றால் எத்தனை மொழிகளில் வேண்டுமானால் நடித்தால் பரவாயில்லை, ஆனால், ஒரு நாயகனாக நடிக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு மொழியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே அங்காவது ஜெயிக்க முடியும். உதவி இயக்குனராக இருந்து நாயகனாக அறிமுகமான சித்தார்த், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நாயகனாக நடித்தாலும் மூன்றிலுமே அவருக்கென்று ஒரு நிலையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சில வருடங்களுக்கு முன் தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். அதன் பின் தமிழில் நடிக்க ஆசைப்பட்டு இங்கு வந்தார்.
“தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா” ஆகிய வெற்றிப் படங்களில் அவர் நடித்தார். இருந்தாலும் முதல் படத்தில் சந்தானமும், இரண்டாவது படத்தில் பாபி சிம்ஹாவும் பெயர் வாங்கிவிட்டார்கள். அடுத்து வெளிவந்த 'காவியத் தலைவன், எனக்குள் ஒருவன்' இப்படி தோல்வியடையும் என்று அவரே கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
இப்போது 'ஜிகர்தண்டா' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம். அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த தெலுங்கு டப்பிங்காவது சித்தார்த்துக்கு அங்கு ஒரு வெற்றியைத் தருமா என்பதுதான் இப்போதைய கேள்வி. அல்லது, தமிழைப் போலவே பாபி சிம்ஹாவுக்கு அங்கு பெயர் கிடைத்து அவர் பிஸியாகிவிடப் போகிறார்.