தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல் போன்ற படங்களை இயக்கியவர் பிரவீன் காந்த், நீண்ட இடைவௌிக்கு பிறகு புலிப்பார்வை என்ற படத்தை இயக்கினார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. இந்நிலையில் இந்தப்படத்திற்கு பிறகு அடுத்தப்படியாக புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்-அப்பில் மூழ்கி கிடக்கின்றனர். அதனால் இதை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். படத்திற்கு வாட்ஸ்-அப் என்று பெயர் வைத்துள்ளார். இன்றைய டிரண்ட் என்ன என்பதை புரிந்து கொண்டு இப்படியொரு தலைப்பு வைத்திருக்கிறார் பிரவீன். படத்தில் காதலையும், காதல் சார்ந்த விஷயங்களையும் சொல்ல போகிறாராம் பிரவீன்.
புதுமுகங்களோடு பிரகாஷ்ராஜ், தம்பி ராமைய்யா, தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார். மே மாதம் முதல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.