'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார், பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 104 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை ஜனவரி 26ம் தேதி அறிவித்தது மத்திய அரசு. இதற்கான விழா, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது. பாலிவுட்டின் மெகா ஸ்டார்களான அமிதாப் பச்சன் மற்றும் திலீப் குமார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி.
இதேப்போல் பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் ஜானு பருவா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும், நடிகர் கோட்டா சீனிவாச ராவ், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.